இயற்கை விவசாய விஞ்ஞானி நம்மாழ்வார் - தோற்றம்
1938; மறைவு 2013.
நம்மாழ்வார் நம்மின் இதயங்களை ஆள்வார்
நம்மை
ஆள்வோரின் அவலங்களை எதிர்த்தார்
தம்
வாழ்நாளெல்லாம் களத்திலிருந்தார்.
வாய்சொல்லில்
வீரம் காட்டாமல்
வாய்க்கால்
வரப்பில் உரம் காட்டாமல்
நம்
மண் செழிப்பது எப்படி என்றுரைத்தார்.
தானும்
தம் மக்களும் செழிக்கவேண்டுமென
நினைக்கும்
மாந்தர் கூட்டத்தில் - நாமும்
நம்
மண்ணும் செழிக்க நினைத்த உத்தமர்.
நம்மாழ்வார்
நம்மின் இதயங்களை ஆள்வார்
நம்மை
ஆள்வோரின் அவலங்களை எதிர்த்தார்.
நாம்
அவருக்கு செய்யவேண்டிய கைமாறு
அவர் விட்டுசென்ற பணிகளை முன்னெடுப்பதுவே...

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக