வெள்ளி, 11 அக்டோபர், 2013

கடவுள்

கடவுளே ஆனாலும் விமர்சனங்களை எதிர்கொண்டுதான் ஆக வேண்டும்; கிரிக்கெட்டின் கடவுளான நீரும் அதற்கு விதிவிலக்கு அல்ல என்பது உமக்கு நன்கு தெரியும்.

ஆ​தலால் விமர்சனங்களை நீர் களத்திலே எதிர்கொள்கிறாய் மேடையில் அல்ல என்பது புரிகிறது;  நீர் சகாப்தாம்தான் கிரிக்கெட்டின் பார்வையில் மட்டுமல்ல சாமான்யனின் பார்வையிலும்.

ஆயிரம் பேதங்கள் எனக்கு உண்டு உம்மிடத்தில் ஆயினும் உமது அர்ப்பணிப்பு உணர்வும், அடக்கமும் என்றுமே என்னை உம்மை அண்ணாந்து பார்க்க வைக்கிறது.

நீர் களத்தினை விட்டு நீங்கி சென்றாலும் உ​மது வீச்சின் வீரியம் நிலைத்து நிற்கும்; அ​தனை மறக்கவோ மறைக்கவோ முயல்வது ஆதவனை கையால் மறைப்பது போன்று.

​நீர் மற்றுமொரு இன்னிங்க்ஸ் விளையாட வேண்டும் என்பது எம்மை போன்ற சாமான்யனின் எதிர்பார்ப்பு; ஆம் உமது அடுத்த மைதானம் ரைசினா ஹில்....  






நீர் சாமான்யனாக வாழ்வை துவங்கியவன், எனவே சாமான்யனின் குரலை ஆளும் வர்க்கத்திடம் எடுத்து வைப்பாய் என நம்பும் பக்தகோடிகள்...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக