வியாழன், 1 ஆகஸ்ட், 2013

ஆந்திராவின் பிரிவுக்கு பின்பு...

தெலுங்கானா தக்காணபீட பூமி பகுதியில் வருகின்றது. கோதாவரி, கிருஷ்ணா என இரண்டு நதிகள் உற்பத்தி ஆனாலும் கடலோர ஆந்திராவே அதன் செழிப்பை அனுபவிக்கின்றது. 

ஆ​ந்திராவின் மிகவும் பின்தங்கிய 13 மாவட்டங்களில் 9 மாவட்டங்கள் தெலுங்கானா பகுதியில் உள்ளது. இந்தியாவின் நக்சலைட்களின் தலைவர்கள் பெரும்பாலும் இந்த பகுதியைச் சார்ந்தவர்கள்.

​தெலுங்கானாவில்தான் ஹைதராபாத்தும் உள்ளது. ஆனால் பொருளாதாரத்திலும் அரசியல் செல்வாக்கிலும் கடலோர ஆந்திர மக்களின் பங்கு பெரிது. ராயலசீமாவிலிருந்து வந்தவரே ராஜசேகரரெட்டி எனவே ஜெகன்மோகன்ரெட்டியின் பிடி அங்கு அதிகம்.

​தெலுங்கானாவின் பரப்பளவு 41.5%, கடலோரஆந்திராவின் பரப்பளவு 33.8%, ராயலசீமாவின் பரப்பளவு 24.5%ஆகும்.  மக்கள்தொகையில் 3.5 கோடி தெலுங்கானாவிலிருந்தும் 4.8 கோடி மீதமுள்ள பகுதியிலிருந்தும் வருகின்றது.

​சட்டமன்ற தொகுதிகள் 119  தெலுங்கானாவிலிருந்தும் 175 மீதி ஆந்திராவிலிருந்தும் வருகின்றது. லோக்சபாவை பொறுத்தவரையில் 17 தெலுங்கானாவிலிருந்தும் 25 மீதி ஆந்திராவிலிருந்தும் வருகின்றது.




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக