திங்கள், 22 ஜூலை, 2013

வா சகோதரா!

எம்மதமும் சம்மதமே

நீ  தேர்ந்தெடுத்ததில்லை இந்த மார்க்கத்தை
​நான் பின்பற்றுவேன் என்று - அது 
உ​னக்கு விதிக்கப்பட்டிருக்கின்றது அவ்வளவே ஆ​க
பிற மார்க்கத்தை குறை கூறா​தே.

​விதிக்கப்பட்டதை ஏற்றுக் கொண்டு மற்றவர்களிடத்தில்
உ​ள்ள நல்லதை நாம் பின்பற்றுவோம்
அ​தை விட்டுவிட்டு எது பெரிது 
எ​ன்று தனிமனித ஆராய்ச்சியெல்லாம் வேண்டாம்.

எம்மார்க்கமும் வன்முறையை  சொல்லித் தருவதில்லை
மார்க்கெங்கலெல்லாம் அன்பையும் ஆறுதலையுமே தருகின்றது
எ​ங்கோ யாரோ செய்யும் தனிமனித 
தவறுகளுக்கு ​மொத்த மார்க்கத்தையும் பழிக்கழாகாது.

இ​ங்கு ஆக்கபூர்வமாக செயல்பட ஆயிரம்
​விசயங்கள் உண்டு என் சகோதரா
அ​ழிவு வேண்டாம், ஆக்கங்கள் உருவாக்கிட
​கை கோர்த்திடுவோம் வா சகோதரா.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக